சேலம்

குடிநீர் வசதி கோரி ஆர்ப்பாட்டம்

DIN

குடிநீர் வசதி செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகம் முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டக்குழு உறுப்பினர் பானுமதி தலைமை வகித்தார். சங்ககிரி வட்டச் செயலர் எஸ்.கே.சேகர், நிர்வாகிகள் செந்தில்குமார், சீனிவாசன், மாணிக்கம், மாதேஸ்வரன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், எர்ணாபுரம் கிராமத்துக்குள்பட்ட கிழக்கு ஜெயபுரி வீதி, கரிமேடு, சொரியம்பட்டி ஆகிய பகுதிகளில் குடிநீர் வசதி செய்து தரக் கோரி வலியுறுத்தப்பட்டது. பின்னர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

SCROLL FOR NEXT