சேலம்

ஈவ் டீசிங்: இளைஞர் கைது

DIN

தம்மம்பட்டியில் இளம்பெண்ணிடம் ஈவ் டீசிங் செய்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
தம்மம்பட்டி 7-ஆவது வார்டைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கௌதமன் (19). துறையூரிலுள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டயம் படித்து வருகிறார்.  இவர்,  தம்மம்பட்டி முஸ்லிம் தெரு அருகே செக்குமேடு பகுதியில் உள்ள பேரூராட்சி பொது கழிவறையிலிருந்து வியாழக்கிழமை காலை வெளியே வந்த அப்பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.
இதையறிந்த அப்பகுதியினர் திரண்டு சென்று கௌதமனை பிடித்து  தம்மம்பட்டி போலீஸில் ஒப்படைத்தனர். காவல் ஆய்வாளர் விஜயகுமார் விசாரணை நடத்தி கௌதமனை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT