ஓமலூர் அருகே இளம் பெண்ணை108 ஆம்புலன்ஸில் பிரசவத்துக்காக அழைத்துச் செல்லும்போது, ஆம்புலன்ஸில் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
ஓமலூர் அருகேயுள்ள ஆட்டுக்காரனூர் கிராமம், மூங்கில் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில், திங்கள்கிழமை மதியம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, தகவலின் பேரில் தாரமங்கலத்தில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக் மற்றும் அவசர மருத்துவ உதவியாளர் செளந்தர்யா ஆகியோர் பிரசவ வழியால் துடித்த சரண்யாவை 108 ஆம்புலன்ஸில் ஏற்றினர். ஆம்புலன்ஸ் சிறிது தூரம் சென்றதும் வலி தாங்காமல் சரண்யா துடித்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸின்அவசர மருத்துவ உதவியாளர் செளந்தர்யா தேவையான முதலுதவிகளை செய்தார்.
இதனைத் தொடர்ந்து சுகப் பிரசவமாக சரண்யாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதைத் தொடர்ந்து, சரண்யாவை சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர்.