வாழப்பாடியில் நாகசக்தி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா
வாழப்பாடி அக்ரஹாரம் நாகசக்தி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அக்ரஹாரம் நாகசக்தி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வாழப்பாடி அக்ரஹாரம் சந்தைப்பேட்டை அருகே நாகசக்தி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் பௌர்ணமியையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், செவ்வாடை அணிந்த பக்தர்களின் பால் குட ஊர்வலம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில், வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.