சேலம்

ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

தினமணி

ஓமலூர் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
 ஓமலூர் பெரிய மாரியம்மன் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வரலட்சுமி விரத நாளில் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். இதில் ஓமலூர் மற்றும் சுற்றியுள்ள 18 பட்டி கிராம மக்களும் கலந்து கொள்கின்றனர். சுமங்கலி பூஜை, மாங்கல்ய பூஜைகள் நடத்தப்படுகின்றன.
 ஓமலூர் கோட்டை மாரியம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் மஞ்சள், குங்குமம், தாலி கயிறு உள்ளிட்டவைகளை வைத்து பூஜை செய்தனர். இந்த பூஜையில் பெண்கள் மட்டுமின்றி ஆயிரக்கணக்கான பக்தர்களும் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டுச் சென்றனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT