முகப்பு
சேலம்

ஜயேந்திரர் மறைவுக்கு ஆர்.எஸ்.எஸ். இரங்கல்

காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரர் மறைவுக்கு தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

காஞ்சி சங்கராச்சாரியார் ஜயேந்திரர் மறைவுக்கு தமிழ்நாடு ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவகர்கள் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.
பாரம்பரியம் மிக்க காஞ்சி சங்கரமடத்தைச் சேர்ந்த ஜயேந்திர சுவாமிகள் முக்தி அடைந்தார் என்ற செய்தியை கேட்டு மிக்க துயரம் அடைகிறோம். ஆன்மிக மற்றும் சமய பணிகளோடு சமுதாயப் பணிகளிலும்   ஈடுபட்டு வந்தார். ஜனகல்யாண் என்ற அமைப்பை ஏற்படுத்தி சமுதாயத்தில் நலிவடைந்த மக்களுக்கு குறிப்பாக பல கிராமங்களில் பல்வேறு சேவைகளை செய்து வந்தார்.
நலிவடைந்த கோயில்களை புனர் நிர்மாணம் செய்து கும்பாபிஷேகங்கள் செய்து வைத்தார். தீண்டாமையையும் ஜாதி ஏற்றத் தாழ்வுகளையும் அகற்றி சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் ஏற்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டார் என ஆர்.எஸ்.எஸ். தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே.குமாரசாமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.