முகப்பு
சேலம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பெயிண்டருக்கு 5 ஆண்டு  சிறை

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Updated On : 29 மார்ச், 2018 at 9:24 AM
பகிர்:

சேலத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த பெயிண்டருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சேலம் மாவட்டம், காரிப்பட்டியைச் சேர்ந்தவர் பெயிண்டர் ராஜேந்திரன் (51) . இவர் 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 
இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமாரி,  பெயிண்டர் ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் 
அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.காந்திமதி ஆஜரானார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.