சேலம்

மேட்டூரில் சூறைக்காற்றுடன் கன மழை

DIN

மேட்டூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கன மழை பெய்தது.
வியாழக்கிழமை காலை மேட்டூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவியது. மாலையில் வனம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 6 மணிக்கு மேட்டூர், தங்கமாபுரிபட்டிணம், புதுச்சாம்பள்ளி, ராமன்நகர், குஞ்சாண்டியூர் பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கன மழை பெய்தது. மழையின் காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சில இடங்களில் திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரைமணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் மின் விநியோகம் நடைபெற்றது. சுமார் 30 நிமிடம் நீடித்த மழையின் காரணமாக பகலில் நீடித்த வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மம்தாவின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மயங்கி விழுந்த நபரால் பரபரப்பு

மாலிவாலை இழிவுபடுத்தவே திருத்தப்பட்ட விடியோக்களை ஆம் ஆத்மி பரப்பி வருகிறது: பாஜக

அயலக தமிழர்கள் பதிவு- தமிழக அரசு அழைப்பு

வீட்டிலிருந்தபடியே வாக்களித்த மூத்த அரசியல் தலைவர்கள்!

கேள்விக்குறியாகும் மாஞ்சோலை தொழிலாளர்களின் எதிர்காலம்: சீமான்

SCROLL FOR NEXT