சேலம்

மேட்டூர் ஜீவி மேல்நிலைப் பள்ளி நூறு சதவீதத் தேர்ச்சி

DIN

மேட்டூர் மாசிலாபாளையம் ஜீவி மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.
இப் பள்ளியில் 158 மாணவர்களும், 145 மாணவியரும் தேர்வு எழுதினர். தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர். நூறு சதவிகிதத் தேர்ச்சி பெற்ற இப்பள்ளியில் கணிதத்தில் 8 பேரும், வேதியியலில் 2 பேரும், கணினி அறிவியலில் 2 பேரும், இயற்பியலில் ஒருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றனர். இப் பள்ளி மாணவ, மாணவியர் 33 பேர் 1,100-க்கு மேலும், 82 பேர் ஆயிரத்துக்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனர். நூறு சதவீதத் தேர்ச்சி பெற்று 5 மாவட்டங்களில் முதன்மை பெற்ற பள்ளியின் நிர்வாகிகளையும், மாணவ, மாணவியருக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கும், பெற்றோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.
புகழ்பெற்ற நிறுவனங்கள் மூலம் ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, பேச்சுப் பயிற்சி  மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டதே தங்களின் தேர்ச்சிக்கு காரணம் என்று மாணவ, மாணவியர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT