சேலம்

மேட்டூர் அணை நீர்வரத்து அதிகரிப்பு

DIN

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11, 402 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக காவிரியின் நீர்பிடிப்புப் பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக அதிகரித்து வெள்ளிக்கிழமை காலை அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 11,402 கனஅடியாக அதிகரித்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 5 ஆயிரம் கனஅடியிலிருந்து 7 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 300 கன அடியிலிருந்து 700 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 69.92 டி.எம்.சியாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT