பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி
ஆட்டையாம்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
ஆட்டையாம்பட்டியில் தனியார் பள்ளி, அரிமா சங்கம் இணைந்து நடத்திய இப்பேரணி காவல் நிலையம் முன் இருந்து தொடங்கியது. பேருந்து நிலையம், மணியாரங்காடு, காய்கறி மார்க்கெட், அம்மன் கோயில் உள்ளிட்ட முக்கிய இடங்கள் வழியாக சென்றது. இதில் பள்ளி மாணவ, மாணவியர் துணிப்பைகளுடன் பிளாஸ்டிக் ஒழிப்பு வாசகம் அடங்கிய அட்டைகளை ஏந்தி சென்றனர்.
இதில் பேரூராட்சி முன்னாள் தலைவர் முருகப் பிரகாஷ், அரிமா சங்கத் தலைவர் அருள், ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.