சேலம்

வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் ஆண் சடலம் மீட்பு

DIN

தம்மம்பட்டி அருகே வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் மர்மமாக கிடந்த ஆண் சடலத்தை போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் வி.ஏ.ஓ. அலுவலக வளாகத்தில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை இரவு தம்மம்பட்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர்.
 அதில், சடலமாக கிடந்தவர் தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் பழனி (47) என்பதும், ஓட்டுநர் தொழில் செய்து வந்ததும் தெரியவந்தது. அதையடுத்து, செவ்வாய்க்கிழமை அவரது உடலை அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இதுகுறித்து தம்மம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT