சேலம்

கழிவு நீர் கால்வாய் வசதியின்றி சாலை அமைக்க எதிர்ப்பு

DIN

பேளூர் பேரூராட்சியில் கழிவு நீர் கால்வாய் வசதியின்றி தார்ச் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
வாழப்பாடியை அடுத்த பேளூர் பேரூராட்சி 15-ஆவது வார்டு நபிகள் நாயகம் தெரு குடியிருப்புப் பகுதிக்கு இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால், கழிவு நீரை வெளியேற்ற வழியின்றி அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பகுதிக்கு தார்ச் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டப் பணிகள் தொடங்கப்பட்டன. பயன்பாட்டில் இருந்த சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு புதிய சாலை அமைப்பதற்கு ஆயத்தப் பணிகள் தொடங்கிய நிலையில், கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் தார்ச் சாலை அமைப்பதால் பலனில்லை என இப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், தார்ச் சாலை அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய் அமைக்கவும், சீரான குடிநீர் விநியோகிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சேலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு இப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். சாலை அமைக்கும் பிரச்னைக்கு தீர்வுகாண இப்பகுதி மக்களுடன் பேரூராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT