சேலம்

சிறுவாச்சூரில் வீட்டில் தீப்பற்றி பொருள்கள் நாசம்

DIN

சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டில் தீப்பிடித்து எரிந்ததில் ஏராளமான பொருள்கள் நாசமாகின. 
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள சிறுவாச்சூரை சேர்ந்தவர் ராமசாமி(45).  இவரது வீட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை  தீ விபத்து ஏற்பட்டது. இதில் வீட்டில் இருந்த அனைத்துப் பொருள்களும் எரிந்து சாம்பலாகின. இதுகுறித்து தகவல் அறிந்து ஆத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகின. விபத்து குறித்து விசாரணையில் மின் கசிவு காரணமாக இருக்கலாம் எனத் தெரிகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த தலைவாசல் காவலர்கள் விசாரித்து வருகின்றனர். வருவாய்த் துறையினரும் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT