சேலம்

ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் பறிப்பு

DIN


சேலத்தில் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரிடம் ரூ. 2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். 
சேலம் மாமாங்கம் அண்ணா நகரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவர், தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
வெள்ளிக்கிழமை மதியம் 2  மணியளவில் வங்கியிலிருந்து ரூ. 1 லட்சத்து 98 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்றார். சோனா கல்லூரி எதிர்ப் பகுதியில் வண்டியை நிறுத்தி விட்டு இனிப்பு வாங்குவதற்காகக் கடைக்குச் சென்றாராம்.   அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 கொள்ளையர்கள் தங்கராஜ் கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துச் சென்றனர். 
இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் சூரமங்கலம் போலீஸார் நிகழ்விடம் விரைந்து விசாரணை நடத்தினர். மேலும் அப் பகுதியிலுள்ள சிசிடிவி கேமிராக்களில் மர்ம நபர்களின் படம் பதிவாகியிருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

SCROLL FOR NEXT