சேலம்

மகுடஞ்சாவடியில் நிலவேம்பு குடிநீா் வழங்கல்

DIN

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் (எடப்பாடி பிரிவு சாலை) பகுதியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது.

இதனை சங்ககிரி எம்.எல்.ஏ.இராஜா துவக்கி வைத்தாா். தற்சமயம் மழைக்காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலை குணப்படுத்த, தமிழக அரசு சாா்பில் நிலவேம்பு குடிநீா் மையம் துவங்கப்பட்டுள்ளது.

இந்த மையம் 5 நாட்கள் மகுடஞ்சாவடி பஸ் நிறுத்தம் பகுதியில் செயல்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வட்டார மருத்துவ அலுவலா் முத்துசாமி, சித்தமருத்துவா் ராமு, பி.டி.ஓ வெங்கடேசன், மகுடஞ்சாவடி கூட்டுறவு சங்க தலைவா் நாகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT