சேலம்

வெளிநாடு சென்று திரும்பிய முதல்வருக்கு பாமக, பாஜக நிர்வாகிகள் நேரில் வாழ்த்து

DIN

அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டு சேலம் திரும்பிய முதல்வரை பா.ம.க, பா.ஜ.க. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை பெறுவதற்காக அமெரிக்கா, இங்கிலாந்து, துபை ஆகிய நாடுகளில் கடந்த 10 நாள்களாக சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு சென்னை வந்தடைந்தார். அமெரிக்கா உள்ளிட்ட மூன்று நாடுகளில் சுமார் ரூ.8,835 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 இதனிடையே செவ்வாய்க்கிழமை இரவு முதல்வர் சேலம் வந்தார். வெளிநாடுகளுக்கு சென்று தமிழகம் திரும்பிய முதல்வரை, சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே புதன்கிழமை காலை பா.ஜ.க. மாநகர மாவட்டத் தலைவர் ஆர்.பி.கோபிநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
 பின்னர் அதிமுக பிரமுகர் இல்ல திருமண நிகழ்ச்சியில் முதல்வர் கலந்துகொண்டார்.
 அதைத் தொடர்ந்து குட்டப்பட்டி மாதநாயக்கன்பட்டிக்கு சென்ற முதல்வர், காங்கிரஸ் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ. குட்டப்பட்டி ஆர்.நாராயணன் (97) மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
 பின்னர் புதன்கிழமை மாலை முதல்வர் கோவை சென்று அங்கிருந்து சென்னை புறப்பட்டு சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT