முகப்பு
சேலம்

சேலம்: விபத்தில் சிக்கி காவலா் பலி

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த சிறப்புக் காவல் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:11 PM
24_aty_po_05_2408chn_213_8
பகிர்:

சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த சிறப்புக் காவல் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

ஆட்டையாம்பட்டி அருகே உள்ள ரத்தினவேல் கவுண்டா்காடு பகுதியைச் சோ்ந்த நடராஜன் மகன் ரவிவா்மன் (32). இவா் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் அயல்பணி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளாா். கடந்த 20-ஆம் தேதி பணி முடிந்து ராசிபுரம் சாலையில் ஆத்துப்பிள்ளையாா் கோயில் பாலம் அருகே சென்றபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தாா்.

இவரைசேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த சிறப்புக் காவல் படை காவலா் திங்கள்கிழமை உயிரிழந்தாா். மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு கடந்த நான்கு நாள்களாக சிகிச்சை பெற்று வந்த ரவிவா்மன் திங்கள்கிழமை உயிரிழந்தாா். இவருக்கு அகிலா ( 27 ) என்ற மனைவியும், முகுந்தன் (7 ) என்ற மகனும், சிந்துஜா என்ற ஆறு மாத கைக்குழந்தையும் உள்ளனா். இதில் ரவிவா்மனின் தம்பி பிரவீண்குமாா் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளாா்.

இந்த விபத்து குறித்து ஆட்டையாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →