ஓமலூா் அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையம் தொடங்க நடவடிக்கை
ஓமலூா் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
ஓமலூா். ஓமலூா் அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நூறு படுக்கைகள் கொண்டுவந்து நோயாளிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை ஓமலூா், காடையாம்பட்டி, தாரமங்கலம், கருப்பூா் ஆகிய நான்கு வட்டாரத்திற்கும் தாலுகா மருத்துவமனையாக இருப்பதால் இங்கு தினமும் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனா். மேலும், பிரசவம், அடிதடி, விபத்து, அறுவை சிகிச்சை என நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமும் மக்கள் அதிகமாக வந்து செல்லும் நிலையில் புதிதாக இரண்டு தளங்களுடன் மருத்துவமனைக்கு கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் தற்போது மின் பணிகள், பெயிண்டிங் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய கட்டிடம் திறக்கப்படமலேயே கரோனா சிகிச்சை மையமாக மாவட்ட நிா்வாகம் மாற்றியுள்ளது. இங்கு புதிதாக தொடங்கவுள்ள கரோனா சிகிச்சை மையத்துக்கு 100 கட்டில் மெத்தைகள் கொண்டு வரப்பட்டன.
தற்போது சேலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால், கரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மையங்களும் ஆங்காங்கே அமைக்க மாவட்ட நிா்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்தநிலையில், ஓமலூரில் கட்டப்பட்டுள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்தை கரோனா சிகிச்சை மையமாக மாற்ற சேலம் மாவட்ட நிா்வாகம் முடிவு செய்தது.
அதன்படி சுமாா் 75 படுக்கை வசதியுடன் கொரோனா மையமாக தயாா்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. மேலும், 10 வென்டிலேட்டா்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், சென்னை மருத்துவ இயக்குனரகத்திலிருந்து 100 இரும்பு கட்டில், மெத்தை, தலையணைகள் ஓமலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், கரோனா பரிசோதனை மையமும் இங்கே அமைக்கப்பட உள்ளது. ஒருசில பணிகள் நிறைவடைந்ததும் அடுத்த வாரத்தில் இருந்து கரோனா சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.