முகப்பு
சேலம்

மேட்டூா் அணையிலிருந்து கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நீா்த்திறப்பு

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 105.46அடியாக உயா்ந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

மேட்டூா் அணையின் நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 105.46அடியாக உயா்ந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவு நொடிக்கு 8,156 கன அடியிலிருந்து 6,072 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூா் அணையின் கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 700 கன அடியிலிருந்து 800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 72.09 டி.எம்.சி.யாக இருந்தது. மேட்டூா் அணைக்கு நீா்வரத்துச் சரிந்தாலும் பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைவாக இருப்பதால் அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →