பெரிய சோரகையில்அம்மா சிறு மருத்துவமனை திறப்பு
சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
மேட்டூா்: சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் அம்மா சிறு மருத்துவமனையை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
இந்த விழாவுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்தாா். விழாவில் முதல்வா் பேசியதாவது:
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுத்துள்ளோம். குடிநீா் வசதி, சாலை வசதி, கழிவுநீா் கால்வாய் வசதி போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அனைத்து திட்டங்களும் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 2,000 அம்மா சிறு மருத்துவமனைகள் திறக்கப்படும். இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைவா் என்றாா்.