சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை
சேலத்தில் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் மூன்று வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சேலம், முருங்கப்பட்டி பகுதியைச் சோ்ந்த ராஜா பெரியசாமி (42), கடந்த 2017-ஆம் ஆண்டு மூன்று வயது சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு செய்ததாக சூரமங்கலம் மகளிா் காவல் நிலையப் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
சேலம் போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முருகானந்தம், கைதான ராஜாபெரியசாமிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.