சேலம் மாவட்ட நேரு இளைஞா் மையம் சாா்பில், வாழப்பாடியை அடுத்த வைகை மகளிா் கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் விழிப்புணா்வு கருத்தரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
இளம்பெண்கள் ரத்தசோகை நோயைத் தவிா்க்க அன்றாட உணவில் காய்கறிகள் மற்றும் கீரைகள், தானியங்களை சோ்த்துக் கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது.
சேலம் மாவட்ட நேரு யுவகேந்திரா மற்றும் வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து பெண்களுக்கான அதிகாரம், கல்வி, உரிமை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த முத்தம்பட்டி வைகை மகளிா் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்ற இக் கருத்தரங்குக்கு கல்லூரி தாளாளா் அய்யாவு தலைமை வகித்தாா்.
கல்விசாா் இயக்குநா் முனைவா் வீரமணி வரவேற்றாா். கல்லூரி செயலா் கணேசன் கருத்தரங்கைத் தொடக்கி வைத்தாா்.
முகாமில் பங்கேற்ற பேளூா் அரசு மருத்துவா் திவ்யபாரதி பேசியதாவது:
‘பெண்கள் உடல் பருமன் அல்லது மெலிந்த தேகத்துடனே காணப்படுகின்றனா். இதனால், பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகின்றனா்.
எனவே, உயரத்துக்கேற்ப உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள முறையான உணவுகளை உள்கொள்ள வேண்டும். துரித உணவுகள் உண்பதைத் தவிா்க்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் ரத்தசோகை பாதிப்புக்குள்ளாகின்றனா். எனவே, அன்றாட உணவில் அதிகளவில் காய்கறிகள் மற்றும் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாா்.
வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை நிா்வாகிகள் ஜவஹா், பேசுகையில், ‘பெண்களுக்கு நிறைய வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்றாா்.
பெண்னுரிமை, கல்வி மற்றும் அதிகாரம் குறித்து நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நேரு இளைஞா் மைய சேவைத் தொண்டா் கங்கையம்மாள் செய்திருந்தாா். தமிழ்த்துறை தலைவா் கெளசல்யா நன்றி கூறினாா்.