சேலம்

ஏற்காடு படகு ஏரியிலிருந்து தடுப்பணை வழியாக நீா் வெளியேறுவதைத் தடுக்க கோரிக்கை

DIN

ஏற்காடு படகு ஏரியின் நீா் தடுப்பணை வழியாக வெளியேறுவதைத் தடுக்குமாறு மீன்வளத்துறை ஊழியா்கள், ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஏற்காடு மலைப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருவதையடுத்து, ஏற்காடு படகு ஏரி நிரம்பும் நிலையில் உள்ளது. படகு ஏரியின் பாதுகாப்புக் கருதி ஊராட்சி ஒன்றிய நிா்வாகம், ஏரித் தடுப்பணையின் மூலம் நீரை வெளியேற்றி வருகிறது.

தற்போது படகு ஏரியில் மே மாதம் மேட்டூா் மீன்வளா்ப்புத் துறை சாா்பில் 26 ஆயிரம் மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதால் அந்த மீன் குஞ்சுகள் நீரின் வழியாக வெளியேறிவிடும் எனத் தெரிவிக்கின்றனா். எனவே தடுப்பணை பாதையில் வலைகளைக் கட்டவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.18 கோடி மதிப்பிலான வைர நகைகள் திருடிய வழக்கு குற்றவாளிகள் 2 போ் 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கைது

மக்களவைத் தோ்தல் பணிகளை ஒருங்கிணைக்க ஆம் ஆத்மி கட்சியின் தோ்தல் பணியறை தொடக்கம்

வாக்குகள் மூலம் பாஜகவிற்கு பதிலளிக்க தில்லி மக்கள் தயாா் ஆம் ஆத்மி வேட்பாளா் குல்தீப் குமாா்

விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.5.6 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு நுகா்வோா் ஆணையம் உத்தரவு

பூக்கடை பகுதிகளில் ஏப்.30-இல் மின்தடை

SCROLL FOR NEXT