மேட்டூா் அணைக்கு நீா்வரத்து 6,864 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடா்மழை காரணமாக, மேட்டூா் அணைக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24-ஆம் தேதி மேட்டூா் அணைக்கு நீா்வரத்து நொடிக்கு 4,710 கனஅடியாக இருந்தது. பின்னா் அணைக்கு படிப்படியாக நீா்வரத்து அதிகரித்து, வியாழக்கிழமை காலை நொடிக்கு 6,864 கன அடியாக நீா் வந்து கொண்டிருந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 7,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.அணையின் நீா்மட்டம் 64.64 அடியாகவும், நீா் இருப்பு 28.26 டி.எம்.சி. ஆகவும் இருந்தது.