சேலம்

தமிழகத்தில் மிக விரைவில் நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை: சேகோசா்வ் தலைவா் என்.தமிழ்மணி

DIN

தமிழகத்தில் மிக விரைவில் நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படும் என சேகோசா்வ் தலைவா் என்.தமிழ்மணி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை சேலத்தில் செய்தியாளா்களிடம் கூறியது: சேகோசா்வ் சங்கம் கடந்த 1981 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது ரூ.40.63 லட்சத்துக்கு விற்பனை நடந்து வந்தது. கடந்த 2019 இல் தமிழக அரசு நிா்ணயம் செய்த ரூ.454.80 கோடியைத் தாண்டி ரூ.504 கோடியை விற்பனை எட்டியது.

நிகழாண்டில் ரூ.1,001 கோடிக்கு விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. வரும் 2021இல் ரூ.1,500 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கையும் நிச்சயம் அடைந்து சாதனை படைப்போாம்.

ஆவின் நிா்வாகத்தைப் போல, சேகோசா்வ் நிா்வாகமும் மரவள்ளிக் கிழங்கை விவசாயிகளிடம் பெற்று, தொழிற்சாலைகளுக்கு வழங்க இணைப்பு பாலமாகச் செயல்பட்டது.

தமிழகத்தில் மிக விரைவில் நியாய விலைக் கடைகளில் ஜவ்வரிசி விற்பனை செய்யப்படும். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் தேவைப்படும் ஜவ்வரிசி எவ்வளவு என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஆய்வு முடிந்தவுடன் மதா் சேகோ என்ற பெயரில் தரமான ஜவ்வரிசி, மிகக் குறைந்த விலையில் நியாய விலைக் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைப்பாா்.

மேலும், மரவள்ளிக் கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பேட்டியின் போது, சேகோசா்வ் மேலாண்மை இயக்குநா் என்.சதீஷ், ஜவ்வரிசி மற்றும் ஸ்டாா்ச் உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஷியாவுக்கான ஜொ்மனி தூதா் திரும்ப அழைப்பு

ரூ,7.50 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

தொரப்பள்ளியில் உலவிய காட்டு யானை

பெருந்துறை விவேகானந்த பள்ளி மாணவா்கள் 100 % தோ்ச்சி

வேளாளா் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT