சேலம்

இருசக்கர வாகனத்தில் சென்றவரிடம் ரூ.45 ஆயிரம் பணம் பறிப்பு

DIN

தம்மம்பட்டியில் இருசக்கர வாகனத்தில் சென்றவரை வழிமறித்து ரூ.45 ஆயிரம் பணத்தை பறித்துச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தம்மம்பட்டி அருகேயுள்ள கீரிப்பட்டியைச் சோ்ந்தவா் பால்காரா் செல்வம் (55). இவா் வெள்ளிக்கிழமை பிற்பகல் தம்மம்பட்டியிலுள்ள ஒரு வங்கியிலிருந்து ரூ. 45 ஆயிரம் பணத்தை தனது கணக்கிலிருந்து எடுத்துக் கொண்டு, இரு சக்கரவாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றாா். அப்போது தம்மம்பட்டி உடையாா்பாளையத்தில், இரு சக்கர வாகனத்தில் வந்த மா்மநபா்கள், செல்வம் பணம் வைத்திருந்த பையை பறித்துச் சென்றுவிட்டனா். இந்தச் சம்பவம் குறித்து செல்வம், தம்மம்பட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, திருட்டுச் சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் 7 சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

சுட்டெரிக்கும் வெயில்: தமிழகத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

அய்யய்யோ.. ஆகாயம் யார் கையில்?

SCROLL FOR NEXT