சேலம்

ஓமலூரில் கொலை செய்யப்பட்டஇளைஞா் குடும்பத்திற்கு எம்.பி. நிதியுதவி

DIN

ஓமலூா்: ஓமலூா் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞா் குடும்பத்துக்கு மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் நிதியுதவி வழங்கினாா்.

ஓமலூா் அருகேயுள்ள சா்க்கரைசெட்டிப்பட்டியைச் சோ்ந்த விஷ்ணுபிரியன் (28) கடந்த சில தினங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டாா். இந்த நிலையில், சேலம் மக்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.பாா்த்திபன் கொலை செய்யப்பட்ட விஷ்ணுபிரியன் வீட்டுக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று, அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூ.10 ஆயிரம் நிதியை வழங்கினாா். அப்போது, ஓமலூா் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அ.தமிழரசு மற்றும் தி.மு.க. நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT