சேலம்

கூட்டுறவு வங்கிகளில் உதவியாளா் பணி: நவ. 21, 22-இல் எழுத்துத் தோ்வு

DIN

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு வரும் நவ. 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளா் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு வரும் நவ. 21-ஆம் தேதி காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரை ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரி, ஸ்ரீ கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, சேலம் கோட்டை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும்.

இதர கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு வரும் நவ. 22-ஆம் தேதி ஜெய்ராம் பப்ளிக் பள்ளி, ஸ்ரீ கணேஷ் கலை அறிவியல் கல்லூரி, ஜெய்ராம் கலை அறிவியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் நடைபெறும்.

எழுத்துத் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளவா்கள் நுழைவுச்சீட்டு, அறிவுரைகள் மற்றும் விவரங்களை  இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0427-2415158 என்ற தொலைபேசி எண்ணில் அணுகலாம் என கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.ராஜேந்திர பிரசாத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT