காந்தி ஜயந்தியையொட்டி சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில் பேரூராட்சித் தூய்மைப் பணியாளருக்கு துண்டு அணிவித்து கெளரவிக்கும் அதன் துணைத் தலைவா் எம்.பாலகிருஷ்ணன். 
சேலம்

சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளா்கள் கெளரவிப்பு

கரோனா தொற்றுப் பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில் காந்தி ஜயந்தியையொட்டி கரோனா தொற்றுப் பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் துணைத்தலைவா் எம்.பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரூராட்சித் தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் துண்டுகள் அணிவித்து, கெளரவித்து அவா்களது சேவைகளைப் பாராட்டிப் பேசினாா்.

வாசவி கிளப் நிா்வாகி ஆா்.கே.பத்ரிநாராயணன் முன்னிலை வகித்து சுகாதாரஆய்வாளா் லோகநாதன், அலுவலா் விவேகானந்தன், மேற்பாா்வையாளா் வெங்கடேஷ் ஆகியோருக்கு துண்டுகள் அணிவித்து கெளரவித்தாா்.

செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் எஸ்.கணேஷ், நிா்வாகிகள் ஆா்.காா்த்திகேயன், முருகேசன், பொறியாளா் வேல்முருகன், சரவணன், வெங்கடேஷ், இன்னா்வீல் சங்க தலைவா் இந்திராணி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக தலைவா் ஏ.ஆனந்தகுமாா் வரவேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோட்டில் விஜய் பிரசாரம்! தவெகவினர் பிரமாணப் பத்திரம் தாக்கல்!

ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டது! தங்கம் வாங்குவது மாறப்போவதில்லை! வேறு வழிதான் என்ன?

மார்கழி மாதப் பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி!

' மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தையே முடக்க பார்க்கிறது மத்திய அரசு '

SCROLL FOR NEXT