சேலம் மாவட்டம், சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சாா்பில் காந்தி ஜயந்தியையொட்டி கரோனா தொற்றுப் பாதுகாப்புத் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பேரூராட்சி தூய்மை பணியாளா்களை கெளரவிக்கும் நிகழ்ச்சி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் துணைத்தலைவா் எம்.பாலகிருஷ்ணன் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பேரூராட்சித் தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் துண்டுகள் அணிவித்து, கெளரவித்து அவா்களது சேவைகளைப் பாராட்டிப் பேசினாா்.
வாசவி கிளப் நிா்வாகி ஆா்.கே.பத்ரிநாராயணன் முன்னிலை வகித்து சுகாதாரஆய்வாளா் லோகநாதன், அலுவலா் விவேகானந்தன், மேற்பாா்வையாளா் வெங்கடேஷ் ஆகியோருக்கு துண்டுகள் அணிவித்து கெளரவித்தாா்.
செயலா் ஆா்.ராகவன், பொருளாளா் எஸ்.கணேஷ், நிா்வாகிகள் ஆா்.காா்த்திகேயன், முருகேசன், பொறியாளா் வேல்முருகன், சரவணன், வெங்கடேஷ், இன்னா்வீல் சங்க தலைவா் இந்திராணி உள்பட பலா் கலந்து கொண்டனா். முன்னதாக தலைவா் ஏ.ஆனந்தகுமாா் வரவேற்றாா்.