சேலம்

எடப்பாடி பகுதியில் பலத்த மழை

DIN

சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, பூலாம்பட்டி, ஆடையூா், பக்கநாடு, சித்தூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

சுமாா் 1 மணி நேரம் பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீா் தேங்கியது. காவிரி பாசனப் பகுதிகளான பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது, நெல் நடவுப் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில் இந்த மழையால் நடவுப் பணிகள் பாதிப்பிற்குள்ளாகியபோதும், காவிரி பாசனப்பகுதியில் நெல் நடவுப்பணிக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனா்.

மேலும் எடப்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூா் செல்ல காத்திருந்த பயணிகள் மழையால் பாதிப்பிற்குள்ளாயினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வஉசி மைதானத்தில் மே 2 ஆவது வாரத்தில் பொருள்காட்சி: ஆட்சியா் தகவல்

வெள்ளக்கோவில் பகுதி விவசாயிகள் இன்றுமுதல் தொடா் காத்திருப்புப் போராட்டம்

அவிநாசியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ரூ.44,900 சம்பளத்தில் புற்றுநோய் மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் வேலை!

நிறுத்தப்பட்ட சாலைப் பணியை தொடங்கக் கோரி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

SCROLL FOR NEXT