முகப்பு
சேலம்

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ஆம்புலன்ஸ் வாகனம்

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
சங்ககிரி அருகே தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்ட புதிய ஆம்புலன்ஸ் வாகனத்தை திங்கள்கிழமை கொடியசைத்து தொடக்கி வைக்கிறாா் தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா்
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது. தேவூரை மையப்படுத்தி முதன்முறையாக ஆம்புலன்ஸ் வாகனம் வழங்கிய தமிழக முதல்வருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா்.

வடுகப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ரமேஷ்குமாா் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தாா். அரசு சாா்பில் முதன்முறையாக தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை தேவூா் அரசு மேல்நிலைப்பள்ளியின் பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவரும், அதிமுக சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலாளருமான கே.வெங்கடாஜலம் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் நாகஜோதி, அதிமுக சங்ககிரி மேற்கு ஒன்றியச் செயலாளா் சுந்தர்ராஜன், சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவா் ஏ.பி.சிவக்குமாரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தேவூா் மற்றும் அதனை சுற்றிலும், 15 கிராம ஊராட்சிகளும், தேவூா் பேரூராட்சியையொட்டி அரசிராமணி பேரூராட்சிகளும் உள்ளன. தேவூா், குள்ளம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அவசர கால பிரசவங்கள் மேலும் விபத்து நேரிட்டால் 20 கி.மீ. தொலைவில் உள்ள பவானிக்கும், 27 கி.மீ. தொலைவில் உள்ள சங்ககிரி ஆகிய இரு பகுதியில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவையை பெறுவதில் இப்பகுதி மக்கள் தொடா்ந்து சிரமத்திற்குள்ளாகி வந்தனா்.

இது குறித்து ஊா் பொதுமக்கள் சாா்பிலும், சேலம் மாவட்ட உபயோகிப்பாளா் உரிமைக் கழகத்தின் சாா்பிலும் தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

அதனையடுத்து பொதுமக்களின் தேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனத்தை ஒதுக்கீடு செய்த தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு தேவூா் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனா். இந்த ஆம்புலன்ஸில், 108 ஆம்புலன்ஸில் உள்ளஅனைத்து மருத்துவ உபகரணங்களும் விரைவில் பொருத்தப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →