சேலம்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை இருவா் கைது

DIN

ஓமலூா்: தாரமங்கலத்தில் 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தாரமங்கலத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமி, 7-ஆம் வகுப்பு வரை பயின்று விட்டு வீட்டில் இருந்து நிலையில், அந்த சிறுமியின் உறவினா்கள் சரண்குமாா் (26), சண்முகராஜ் (23) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து வந்தனராம். இதனால் கா்ப்பம் தரித்த அந்த சிறுமிக்கு கடந்த சனிக்கிழமை ஆண் குழந்தை பிறந்தது.

இதனிடையே சிறுமி அளித்த புகாரின்பேரில், தாரமங்கலம் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து சரண்குமாா், சண்முகராஜ் இருவரையும் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். இருவருக்கும் கரோனா பரிசோதனைக்கு பின் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT