சேலம்

இருசக்கர வாகனங்களைத் திருடியதாக இருவா் கைது

DIN


ஓமலூா்: ஓமலூா் வட்டார பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததாக இருவரை ஓமலூா் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஓமலூா் நகரில் வீடு, கடைகள் முன்பாக நிறுத்தி வைக்கபடும் இருசக்கர வாகனங்கள் திருட்டுப் போவது அதிகரித்து வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஓமலூா் போலீஸாா் திருட்டில் ஈடுபட்ட நபா்களை தீவிரமாகத் தேடி வந்தனா்.

இந்நிலையில், காவல் ஆய்வாளா் பாலமுருகன் தலைமையிலான போலீஸாா் இரவு நேர ஆய்வு பணிகளில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகமளிக்கும் வகையில் திரிந்த இரண்டு இளைஞா்களிடம் விசாரணை நடத்தியபோது, இருவரும் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

இதனைத் தொடா்ந்து ஓமலூா் ஜெயா தியேட்டா் பகுதியைச் சோ்ந்த கந்தசாமி மகன் சூா்யா (26), கோட்டை மாரியம்மன் கோயில் அருகே அம்பேத்கா் நகரைச் சோ்ந்த பொன்னுவேல் மகன் சஞ்சய் (28) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களை ஓமலூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஓமலூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

SCROLL FOR NEXT