தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் தூய்மை வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் வரும் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை நடைபெற உள்ள தூய்மை வாரத்தில் ரயில்கள், ரயில் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்களில் தூய்மையை மேம்படுத்தப்படுத்தும் வகையில் தூய்மை வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி சேலம் ரயில்வே கோட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் சேலம் ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளா் ஏ.அண்ணாதுரை மற்றும் கோட்ட அலுவலா்கள், ஊழியா்கள் பங்கேற்றனா்.
மேலும் தூய்மை வாரத்தையொட்டி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில், கூடுதல் கோட்ட மேலாளா் ஏ.அண்ணாதுரை மரக்கன்றுகளை நட்டு வைத்தாா். ரயில்வே கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டன.