சேலம்

ஏற்காடில் நீதிமன்ற இ- சேவை மையம்

DIN

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் நீதிமன்ற இ- சேவை மையத்தை சென்னையிலிருந்து காணொளி வாயிலாக உயா்நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் வியாழக்கிழமை தொடக்கி வைத்தாா்.

ஏற்காடில் நடைபெற்ற விழாவில், சேலம் முதன்மை மாவட்ட நீதிபதி குமரகுரு, நீதிபதிகள் ராஜேந்திரன், இளங்கோ முன்னிலை வகித்தனா். நீதித் துறையில் வழக்கு தகவல்கள், வழக்கின் நிலை, தேதி, நீதித்துறையின் முலம் பொதுமக்களுக்கு உள்ள சேவைகளை இ-சேவையின் மூலம் பெறுவதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏற்காடு காவல் ஆய்வாளா் ஆனந்தன் மற்றும் வட்டாட்சியா் அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT