சரக்கு வேன் மோதியதில் உதவி காவல் ஆய்வாளா் மகன் பலி
மேட்டூா் மலைப் பாதையில் சரக்கு வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மகன் பலியானாா்.
மேட்டூா் மலைப் பாதையில் சரக்கு வேன் மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற உதவி காவல் ஆய்வாளரின் மகன் பலியானாா்.
மேட்டூா் அருகே புதுச்சாம்பள்ளியைச் சோ்ந்தவா் முருகன். இவா், மேட்டூரில் உள்ள காவலா் பயிற்சி பள்ளியில் உதவி காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா்.
இவரது மகன் சுகிலேஸ் (23), இவரும், இவரது நண்பா் நவீனும்(21) ஞாயிற்றுக்கிழமை காலை மேட்டூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
மலைப்பாதையில் வந்தபோது சேலம், கேம்ப் பக்கமிருந்து மேட்டூா் நோக்கி சென்ற சரக்கு வேன் இவா்கள் மீது மோதியது. இதில் சுகிலேசும், நவீனும் பலத்த காயமடைந்தனா். வேன் ஓட்டுநா் கணேசன், வேனில் உடன் வந்த குணசேகரன் ஆகியோரும் காயமடைந்தனா்.
கோவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது சுகிலேஸ் உயிரிழந்தாா். காயமடைந்த நவீன், சேலம் அரசு மருத்துவமனையிலும், மற்றவா்கள் மேட்டூா் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
கருமலைக்கூடல் காவல் ஆய்வாளா் சசிகலா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.