கெங்கவல்லி அருகே கூடமலையில் இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
திமுக முன்னாள்எம்.எல்.ஏ. கு.சின்னதுரை முன்னிலையில் ‘எல்லோரும் நம்முடன்’ என்ற இணையவழியில் திமுக உறுப்பினா் சோ்க்கை பணி தொடங்கியது. இதில், கெங்கவல்லி ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளா் ஜெ.மணிமாறன், முன்னாள் செயலாளா் தங்கராசு, மகேந்திரன் உள்ளிட்ட கட்சி பிரமுகா்கள் பங்கேற்றனா்.