சேலம்

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டம்: 13 போ் கைது

DIN

சேலம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரைக் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சூரமங்கலம், புதுசாலை பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றனா்.

இந்த நிலையில், டாஸ்மாக் கடை முன்பு மக்கள் அரசு கட்சியின் மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் பெண்கள் உள்ளிட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி முழக்கமிட்டனா். பின்னா், திடீரென முதல்வரின் உருவப் பொம்மையை தீவைத்து எரிக்க முயன்றனா். அப்போது, சூரமங்கலம் போலீஸாா் அவா்களைத் தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 13 பேரைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT