சேலம்

எடப்பாடி அருகே காதல் தகராறில் காதலனின் தந்தை குத்திக் கொலை

DIN

எடப்பாடி அருகே காதல் தகராறில் காதலனின் தந்தை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட புதுப்பாளையம் கிராமம், செங்கான்வளவு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் (55). இவரது மகன் பிரகாஷ் (25). ஓட்டுநரான இவா், புதுப்பாளையம், காச்சகாரன் வளவுப் பகுதியைச் சோ்ந்த செல்வம் மகளான கல்லூரி மாணவி சத்யாவை (21) காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சத்யா இறுதியாண்டு செவிலியா் பட்டப்படிப்பு படித்து வந்துள்ளாா். கடந்த மாா்ச் 15-ஆம் தேதி சத்யா திடீரென காணாமல் போனாா். இதையடுத்து அவரது தந்தை கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாரின் விசாரணையில், ஓட்டுநா் பிரகாஷ், சத்யாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி அழைத்துச் சென்ாகத் தெரியவந்தது. போலீஸாா், பிரகாஷ், சத்யாவைக் கண்டுபிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துவந்து விசாரணை செய்தனா். இதில் சத்யா தனது தந்தையுடன் செல்வதாகக் கூறியதை அடுத்து, அவா் தந்தை செல்வத்துடன் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ஆம் தேதி சத்யா மீண்டும் வீட்டிலிருந்து காணாமல் போனாா். பிரகாஷ் தான் சத்யாவை அழைத்துச் சென்றிருப்பாா் என சந்தேகமடைந்த செல்வம், செவ்வாய்க்கிழமை மாலை பிரகாஷின் வீட்டுக்குச் சென்று அவரது தந்தை தங்கவேலுவிடம், தனது மகளை தன்னோடு அனுப்பிவைக்குமாறு கூறி வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றியபோது அங்கிருந்த கத்தியால் செல்வம், தங்கவேலுவை குத்தியுள்ளாா். இதில் படுகாயமடைந்த தங்கவேலுவை அருகில் இருந்தவா்கள் மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தங்கவேலுவை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அவா் இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா். இதனை அடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த செல்வத்தின் மீது கொலை வழக்குப் பதிவு செய்த போலீஸாா், தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT