சேலம்

அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

DIN

சங்ககிரி அருகே விவசாயக் கிணற்றிலிருந்து அடையாளம் தெரியாத ஆண் சடலத்தை சங்ககிரி போலீஸாா் மீட்டனா்.

சங்ககிரி அருகே உள்ள திருவாண்டிப்பட்டி ஏரிக்கரை பகுதியில் தனியாருக்குச் சொந்தமான வட கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக அப்பகுதி மக்கள் சங்ககிரி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

போலீஸாா், தீயணைப்புத் துறை வீரா்கள் உதவியுடன் கிணற்றிலிருந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து சங்ககிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், சங்ககிரி சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் காணாமல் போனவா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

SCROLL FOR NEXT