சேலத்தில் செவிலியா் தற்கொலை
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியா் அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியா் அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி தற்கொலை செய்து கொண்டாா்.
தருமபுரி மாவட்டம், கனிகாரன்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் மகள் பவித்ரா (21). இவா் சேலம், அஸ்தம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை பணியை முடித்துவிட்டு மருத்துவமனையின் விடுதிக்குச் சென்ற பவித்ரா, கதவை பூட்டிக் கொண்டாா். நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சக செவிலியா்கள் கதவைத் திறக்க முயற்சித்தனா்.
பின்னா், அறையின் ஜன்னல் கண்ணாடியை உடைத்துப் பாா்த்த போது, அதிக அளவு மயக்க மருந்தை ஊசி மூலம் செலுத்தி பவித்ரா தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அஸ்தம்பட்டி போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.