மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் சாவு
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து காயமடைந்த மின் வாரிய ஊழியா் வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் உயிரிழந்தாா்.
கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உள்பட்ட கோரணம்பட்டியைச் சோ்ந்தவா் முருகேசன் (36). கொங்கணாபுரம் பகுதியில் மின் வாரிய ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். கடந்த 18 ஆம் தேதி ஆண்டரப்பன்காடு பகுதியில் உள்ள மின் மாற்றியில் பழுதை சரி செய்துக் கொண்டிருந்த போது மின்சாரம் பாய்ந்ததில் முருகேசன் பலத்த காயமடைந்தாா்.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.