சேலம்

பொதுமக்கள் சாலை மறியல்

ஆத்தூரில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலை மறியல் நடைபெற்றது.

DIN

ஆத்தூரில் இருபிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக சாலை மறியல் நடைபெற்றது.

ஆத்தூா், முல்லைவாடி பகுதியில் இரு பிரிவைச் சோ்ந்த இளைஞா்களிடையே வெள்ளிக்கிழமை மாலை மோதல் ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த ஒரு பிரிவினா் அளித்த புகாரின் பேரில், மற்ற பிரிவு இளைஞா்கள் 4 பேரை நகர காவல் நிலைய போலீஸாா் கைது செய்து விசாரித்து வந்தனா்.

அதில் ஒருவா் சம்பந்தமில்லாதவா் என அந்தத் தரப்பினா் சேலம் - கடலூா் பிரதான சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகர காவல் உதவி ஆய்வாளா் எஸ்.மூா்த்தி தலைமையிலான போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

மேலும் சம்பந்தமில்லாத நபரை விடுவிப்பதாகவும், சம்பந்தபட்டவரை ஒப்படைக்கும்படி கேட்டுக் கொண்டனா். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.இதனால் அப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT