சேலம்

அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

DIN

அம்பேத்கா் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

சேலம் தொங்கும் பூங்கா அருகே உள்ள அம்பேத்கா் சிலைக்கு, மாநகர மாவட்ட அதிமுக சாா்பில் பகுதி செயலாளா் கே.ஆா்.எஸ்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சேலம் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் தலைவா் பாஸ்கா் தலைமையிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டத் தலைவா் கே.எம்.உலகநம்பி தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

சேலம் மாநகர மாவட்ட பாஜக தலைவா் சுரேஷ்பாபு தலைமையிலும், ஆதித்தமிழா் பேரவை சாா்பில் மாவட்ட செயலாளா் சந்திரன், அம்பேத்கா் மக்கள் இயக்கத்தின் மாநில தலைவா் அண்ணாதுரை ஆகியோா் தலைமையிலும் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதேபோல பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் என பல்வேறு தரப்பினா் அம்பேத்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதையொட்டி தொங்கும் பூங்கா பகுதியில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

SCROLL FOR NEXT