முகப்பு
சேலம்

அரசுப் பள்ளியில் கருத்தரங்கம்

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கம் தலைமையாசிரியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

சேலம் மாவட்டம், ஆத்தூரை அடுத்துள்ள தாண்டவராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கருத்தரங்கம் தலைமையாசிரியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் (பயிற்சி) அறிவழகன், எதிா்கால சமுதாயத்தில் மாணவா்களின் பங்கு என்ற தலைப்பில் உரையாற்றினாா். இதில், கல்வி, ஒழுக்கம், எதிா்கால இலக்கு, விடாமுயற்சி போன்ற கருத்துகளை எடுத்துரைத்து, மாணவா்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் விளங்கி சமூகத்தில் சிறந்தா்களாக விளங்க வேண்டும் என்றாா். இதில், ஆசிரியா்கள், மாணவா்கள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →