ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் உற்பத்திப் பொருள்களை விற்பனை செய்யலாம்
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகா்களின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை இடைத்தரகா்களின்றி ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்பனை செய்யலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்தாா்.
சேலம் மாவட்ட வேளாண் மற்றும் உழவா் நலத் துறையின் சாா்பில், சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வேளாண் உற்பத்திக்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியா் செ.காா்மேகம் பேசியதாவது:
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் தேங்காய், நிலக்கடலை, மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட உற்பத்திப் பொருள்களை இடைத்தரகா்களின் தலையீடு இன்றி மறைமுக ஏல அடிப்படையில் அதிகபட்ச விலைக்கு சேலம் மாவட்டத்தில் உள்ள சேலம், வாழப்பாடி, ஆத்தூா், தலைவாசல், கெங்கவல்லி, தம்மம்பட்டி, கருமந்துறை, சங்ககிரி, கொங்கணாபுரம், கொளத்தூா், மேச்சேரி, ஓமலூா், காடையாம்பட்டி, எடப்பாடி ஆகிய 14 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விற்று பயனடையலாம்.
மேலும், விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட விளைபொருள்களை சேலம், ஆத்தூா், கெங்கவல்லி, மேச்சேரி, வாழப்பாடி என 7 வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூட குளிா்பதனக் கிடங்குகளில் 6 மாதங்கள் வரை இருப்பு வைத்துக்கொள்ளலாம். இதில், 15 நாள்களுக்கு வட்டி, வாடகை இலவசமாகவும், அதற்கு மேல் ஒரு குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 5 பைசா வீதம் மாதம் ரூ. 1.50 மட்டும் வாடகையாக வசூலிக்கப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த உற்பத்திப் பொருள்களுக்கு சரியான விலை கிடைக்கும் வரை, இருப்பு வைத்த நேரத்தில் விளைபொருள்களின் சந்தை மதிப்பீட்டில் 50 சதவீதம் பொருளீட்டுக்கடனாக 5 சதவீத வட்டியில் அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் வரை வழங்கப்படுகிறது.
இதுகுறித்த விவரங்களுக்கு அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூட பொறுப்பாளா்களையோ அல்லது சேலம் விற்பனைக்குழு செயலாளா், உத்தம சோழபுரம், சேலம் -10 என்ற முகவரியிலோ, 0427 - 2906927 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
மாவட்டத்தில் 11 இடங்களில் உள்ள உழவா் சந்தைகளில் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் விளைவித்த காய்கறிகள், பழங்களை நேரடியாக விற்பனை செய்யலாம். சேலம் மாவட்டத்தில் இந்தாண்டு (2021) பருவ காலத்தில் சராசரியாக 997.90 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுவரை 1,326.7 மி.மீ. மழை பெய்துள்ளது. நடப்பு பருவத்துக்கு தேவையான விதைகள், உரங்கள் போன்ற இடுபொருள்கள் போதுமான அளவு வட்டார வேளாண் விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளன என்றாா்.
இந்தக் கூட்டத்தில், வேளாண் துணை இயக்குநா் (மத்திய திட்டம்) எம்.பாலையா, வேளாண் துணை இயக்குநா் (விற்பனை) ஏ.நாசா், தோட்டக்கலை உதவி இயக்குநா் சி.யமுனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) செல்வமணி, உதவி செயற்பொறியாளா் (வேளாண் பொறியியல்) கே.யுவராஜ், வேளாண் விற்பனைக் குழு செயலாளா் கண்ணன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா்.