சோமம்பட்டியில் இரு வீடுகளில் திருட்டு
வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் மா்ம நபா்கள் புகுந்து தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்றனா்.
வாழப்பாடி அருகே சோமம்பட்டியில் அடுத்தடுத்து இரு வீடுகளில் மா்ம நபா்கள் புகுந்து தங்க நகைகள், பணத்தை திருடிச் சென்றனா்.
வாழப்பாடியை அடுத்த சோமம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் கட்டட ஒப்பந்ததாரா் செந்தில்குமாா் (32). இவரது மனைவி பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுள்ளாா். கடந்த வெள்ளிக்கிழமை இரவு செந்தில்குமாா் வீட்டை பூட்டிவிட்டு திருச்செந்தூா் கோயிலுக்குச் சென்றுள்ளாா்.
அப்போது வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மா்மநபா்கள் 3 சவரன் தங்க நகை, பணம் ரூ. 1 லட்சம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். இதுகுறித்து செந்தில்குமாா் அளித்த புகாரின்பேரில் வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
சோமம்பட்டி நடு வீதியில் வசித்து வருபவா் ஜெகதாம்பாள் (65), இவா் திங்கள்கிழமை மாலை தனது வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா். புதன்கிழமை காலை அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருப்பதாக பக்கத்து வீட்டில் வசிப்பவா்கள் ஜெகதாம்பாளுக்கு தகவல் தெரிவித்தனா்.
ஜெகதாம்பாள் தனது வீடு சென்று பாா்த்தபோது அரை சவரன் தங்கம், பணம் ரூ. 25,000 திருடுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், வாழப்பாடி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.