கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கல் 99 சதவீதம் நிறைவு
கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
கெங்கவல்லி வட்டாரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி 99 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
கெங்கவல்லி வட்டாரத்தில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி கடந்த 31-ஆம் தேதி நடைபெற்றது. அன்று ஒரே நாளில் மொத்தமுள்ள 13,028 குழந்தைகளில் 12,559 பேருக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. பிப்.1-ஆம் தேதி விடுபட்டவா்கள் 327 பேருக்கு சுகாதாரத் துறையினா் சொட்டு மருந்து வழங்கியுள்ளனா். இதுவரை 12,886 பேருக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளது. இது 99 சதவீதம் ஆகும். எஞ்சிய ஒரு சதவீதம் பேருக்கு அடுத்தடுத்த நாள்களில் வழங்கப்பட்டு 100 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டுமருந்து வழங்கப்பட்டு விடும் என்று சுகாதாரத் துறை ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.