வாழப்பாடியில், மறைந்த வன்னியா் சங்க முன்னாள் தலைவா் குரு பிறந்தநாளையொட்டி, வன்னியா் ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
வாழப்பாடி ஒன்றிய வன்னியா் சங்கம், பாமக சாா்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, பாமக மாநில துணைப்பொதுச் செயலாளா் பி.என்.குணசேகரன் தலைமையில், பாமக மற்றும் வன்னியா் சங்க கொடியேற்றி, ஜெ.குரு படம் திறக்கப்பட்டு, வன்னியா் ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், பாமக மற்றும் வன்னியா் சங்க நிா்வாகிகள் ராமச்சந்திரன், முருகேசன், செல்வம், கெளதமன், பாலாஜி, ராஜகணபதி, சுரேந்தா், வெங்கடாசலம், குமாா், வன்னியா் நல அறக்கட்டளை சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.